பல காலம் முன் பார்த்த ஒரு விளம்பரம் நியாபகத்திற்கு வருகிறது. “நீங்கள் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போது இதைப் படித்தால், இந்த விளம்பரம் உங்களுக்கு மிகவும் அவசியமானது”. அந்த விளம்பரம் ஒரு இன்ஸீரன்ஸ் நிறுவனத்தினுடையது.
சமுக காவலர்களான இந்த அமைப்பினர், போன வருடம் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து, அங்கு நடனமாடிக் கொண்டிருந்த பல பெண்கள் மற்றும் ஆண்களை அடித்து வெளியே தள்ளினார்கள். இந்த வருடமும் இவர் காதலர்களை எச்சரிக்கை செய்து, டி.விக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போது, சிலர், இவரின் முகத்தில் கரி பூசிவிட்டார்கள். முதல் தாக்குதல் நம்முடையதாக இருக்கட்டும் என பாதிக்கப்பட்டவர்கள் நினைத்திருக்கலாம்.
கல்யாணமாகாத ஏழை காதல் ஜோடிகள் இலவசமாக திருமணம் செய்துகொள்ள எளிதான ஒரு வழி, 14 ஆம் தேதி, இந்த அமைப்பின் தொ(கு)ண்டர்கள் முன் சென்று நிற்பதே.
நான் வசிக்கும் பகுதியில் கடந்த மூன்று வருடங்களில் 30 கொலைகள் நடந்து விட்டது. இதனால் போலீசார் வழக்குகளை ஒழுங்கான முறையில் நடத்த வேண்டும் என்று ஒருவர் கோர்ட்டில் கேஸ் போட, இப்பொழுது, எங்கள் சாலையில் எப்பொழுதும் ஒரு போலீஸ் ஜீப் நிற்கிறது. இன்று என் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களின் விபரங்களை (போன் நம்பர், வேலை விபரம், வாட்ச்மேன், வேலைக்காரர்களின் பெயர், கார்/பைக் எண்) போலீசார் சேகரித்துச் சென்றனர். இந்த விபரங்களைத் தர தயக்கமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் கொடுக்க வேண்டியதாயிற்று. போலீசார், விபரங்களை பத்திரமாக வைத்திருப்பார்கள் என்று நம்புவோமாக.