(90 சதவிகித உண்மை 10 சதவிகித கதை இது)
பைக்கை சைட் ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு, அழைத்த செல்போனை எடுத்தான், மோகன்.
“சொல்லு, பரணி ! என்ன விஷயம் ?”.
“மாப்ளே, நம்ம ஜெய் இருக்கானில்ல, அவன் 1 மணி நேரத்துக்கு முன்னாடி, பைக்ல போய்கிட்டிருந்தப்போ, திருப்பத்துல வந்த பஸ்ல மோதி, ஆக்ஸிடண்ட். ராஜா ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்கடா”.
மோகன் ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்த போது, எல்லாம் முடிந்திருந்தது. ஜெய் ! போயே போய்விட்டான். காலையில் பார்த்து கலாய்த்த ஜெய் இப்பொழுது இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.
”கொடுமை பரணி. கல்யாணமாகி ஒண்ணரை வருஷம், மூணு மாசத்துல ஒரு குழந்தை. இப்ப போய் சேர்ந்துட்டான். எல்லாத்துலயும் அவசரம்” தலையில் கையை வைத்துக்கொண்டு சொன்னான் மோகன்.
“நம்ம சுந்தர் கல்யாண விருந்துக்காக, தண்ணி வாங்கிட்டு, ஃபுல்லா ஏத்திக்கிட்டு வண்டி ஓட்டியிருக்கான். குடிச்சுட்டு வண்டி ஓட்டுனதால இப்ப இன்ஸூரன்ஸ் பணமும் வராதுடா” என்றான் ரமணி.
ஹாஸ்பிடல்ல எல்லாம் முடிந்து, வீட்டுக்கு எடுத்துப் போகப்பட்டான் ஜெய். என்ன நடந்தது என்று இன்னும் புரியாத நிலையில் ஜெய்யின் மனைவி. அழுதபடி அவன் குழந்தை.
”டேய் ! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கணும்டா. சிங்கம் மாதிரி இருக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். ரெண்டு சிங்கம்; நடுவுல அவன் சேர்ல உட்கார்ந்திருக்குற மாதிரி போட்டோ போட்டுடலாம்”.
காலையில் பைக்கில் போனவன், அன்று சாயங்காலத்தில், நாலு பேர் தூக்க, போய் சேர்ந்தான்.
“டேய் ! இப்பத்தான்டா கொஞ்சம் கொஞ்சமா, அவன் இல்லைங்கிறதே உறைக்குதுடா. எனக்கு ஒரு கிளாஸ் ஊத்துடா” என்றான் மோகன்.
“போதும்டா ! ரொம்ப ஓவராய்டுச்சு உனக்கு. நீ வீட்டுக்கு கிளம்பு. வண்டி ஓட்டிடுவ இல்ல !” என்றான் பரணி.
”என்னைய என்ன கண்ட்ரோல் இல்லாதவன்னு நினைச்சியா ! போடா”, என்று தள்ளாடியபடி, மோகன் பைக்கை கிளப்பினான்.
பைக்கை சைட் ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அழைத்த செல்போனை எடுத்தான், முரளி.
“மாப்ளே, நம்ம மோகன் இருக்கானில்ல, அவன் 1 மணி நேரத்துக்கு முன்னாடி, பைக்ல போய்கிட்டிருந்தப்போ, திருப்பத்துல வந்த பஸ்ல மோதி, ஆக்ஸிடண்ட். ஸ்பாட்லயே போய்ட்டான்டா” என்றான் பரணி.
பைக்கை சைட் ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு, அழைத்த செல்போனை எடுத்தான், மோகன்.
“சொல்லு, பரணி ! என்ன விஷயம் ?”.
“மாப்ளே, நம்ம ஜெய் இருக்கானில்ல, அவன் 1 மணி நேரத்துக்கு முன்னாடி, பைக்ல போய்கிட்டிருந்தப்போ, திருப்பத்துல வந்த பஸ்ல மோதி, ஆக்ஸிடண்ட். ராஜா ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்கடா”.
மோகன் ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்த போது, எல்லாம் முடிந்திருந்தது. ஜெய் ! போயே போய்விட்டான். காலையில் பார்த்து கலாய்த்த ஜெய் இப்பொழுது இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.
”கொடுமை பரணி. கல்யாணமாகி ஒண்ணரை வருஷம், மூணு மாசத்துல ஒரு குழந்தை. இப்ப போய் சேர்ந்துட்டான். எல்லாத்துலயும் அவசரம்” தலையில் கையை வைத்துக்கொண்டு சொன்னான் மோகன்.
“நம்ம சுந்தர் கல்யாண விருந்துக்காக, தண்ணி வாங்கிட்டு, ஃபுல்லா ஏத்திக்கிட்டு வண்டி ஓட்டியிருக்கான். குடிச்சுட்டு வண்டி ஓட்டுனதால இப்ப இன்ஸூரன்ஸ் பணமும் வராதுடா” என்றான் ரமணி.
ஹாஸ்பிடல்ல எல்லாம் முடிந்து, வீட்டுக்கு எடுத்துப் போகப்பட்டான் ஜெய். என்ன நடந்தது என்று இன்னும் புரியாத நிலையில் ஜெய்யின் மனைவி. அழுதபடி அவன் குழந்தை.
”டேய் ! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கணும்டா. சிங்கம் மாதிரி இருக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். ரெண்டு சிங்கம்; நடுவுல அவன் சேர்ல உட்கார்ந்திருக்குற மாதிரி போட்டோ போட்டுடலாம்”.
காலையில் பைக்கில் போனவன், அன்று சாயங்காலத்தில், நாலு பேர் தூக்க, போய் சேர்ந்தான்.
“டேய் ! இப்பத்தான்டா கொஞ்சம் கொஞ்சமா, அவன் இல்லைங்கிறதே உறைக்குதுடா. எனக்கு ஒரு கிளாஸ் ஊத்துடா” என்றான் மோகன்.
“போதும்டா ! ரொம்ப ஓவராய்டுச்சு உனக்கு. நீ வீட்டுக்கு கிளம்பு. வண்டி ஓட்டிடுவ இல்ல !” என்றான் பரணி.
”என்னைய என்ன கண்ட்ரோல் இல்லாதவன்னு நினைச்சியா ! போடா”, என்று தள்ளாடியபடி, மோகன் பைக்கை கிளப்பினான்.
பைக்கை சைட் ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அழைத்த செல்போனை எடுத்தான், முரளி.
“மாப்ளே, நம்ம மோகன் இருக்கானில்ல, அவன் 1 மணி நேரத்துக்கு முன்னாடி, பைக்ல போய்கிட்டிருந்தப்போ, திருப்பத்துல வந்த பஸ்ல மோதி, ஆக்ஸிடண்ட். ஸ்பாட்லயே போய்ட்டான்டா” என்றான் பரணி.